அண்மைய செய்திகள்

recent
-

மாறன் சகோதரர்களைச் சிறையில் அடைத்து விசாரிக்கலாம்: நீதிபதி!


சட்டவிரோத தொலைபேசி இணைப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை எனில் அவர்களைச் சிறையில் அடைத்து விசாரிக்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் இன்று (மார்ச் 20) தெரிவித்துள்ளது.

2004 முதல் 2007ஆம் ஆண்டு வரை மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் தன்னுடைய அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி தனியார் தொலைக்காட்சிக்கு முறைகேடாக 700க்கும் மேற்பட்ட இணைப்புகளை வழங்கியதாக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் கடந்த ஜனவரி 30ஆம் தேதி குற்றம்சாட்டப்பட்ட 7 பேர் மீதும் குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டது.

இதை எதிர்த்து மாறன் சகோதரர்கள் தரப்பில் தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர் நீதிமன்றம் நீதிபதி, ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி தனது உத்தரவில், குற்றச்சாட்டுப் பதிவை ரத்து செய்யக் கோரி மீண்டும், மீண்டும் மனுதாரர்கள் தரப்பில் வழக்கு தொடரப்படுகிறது. ஆதாரங்களை ஆய்வு செய்த பிறகு தான் குற்றச்சாட்டுகளை விசாரணை நீதிமன்றம் பதிவு செய்திருக்கிறது. எனவே, விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவுகளில் தலையிடப் போதுமான காரணங்கள் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே குற்றச்சாட்டுகளிலிருந்து மாறன் சகோதரர்களை விடுவிக்க மறுத்த உச்ச நீதிமன்றம் அவர்களது மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. ஆதாரங்கள் அடிப்படையில் மட்டுமே குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதால் மனுதாரர்கள் வழக்கைச் சந்தித்து சட்டப்படி நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம். தற்போதைய நிலையில் குற்றச்சாட்டுப் பதிவை ரத்து செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்வதாகவும் விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணை 4 மாதத்தில் முடிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

வழக்கின் விசாரணைக்கு குற்றம்சாட்டப்பட்டவர்கள் முறையாக ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றால் விசாரணை நீதிமன்றம் அவர்களுக்கு எதிராக வாரண்ட் பிறப்பித்து சிறையில் அடைத்து வழக்கு விசாரணையைத் தொடரலாம் எனவும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் குறிப்பிட்டார்.

மாறன் சகோதரர்களைச் சிறையில் அடைத்து விசாரிக்கலாம்: நீதிபதி! Reviewed by Author on March 21, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.