அண்மைய செய்திகள்

recent
-

மாந்தை சந்தியில் அமைக்கப்பட்டிருந்த திருக்கேதீஸ்வர ஆலயத்தின் அலங்கார நுழைவாயில் உடைப்பு தொடர்பான வழக்கு விசாரனை ஒத்திவைப்பு-(படம்)

மாந்தை சந்தியில் அமைக்கப்பட்டிருந்த  திருக்கேதீஸ்வர ஆலயத்தின் அலங்கார நுழைவாயில் உடைப்பு தொடர்பான வழக்கு விசாரனை  இன்று வெள்ளிக்கிழமை (29) விசாரனைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போது குறித்த வழக்கு விசாரனையினை எதிர் வரும் யூன் மாதம் 28 ஆம் திகதிக்கு மன்னார் நீதவான் ரீ.சரவணராஜா ஒத்தி வைத்தார்.

மன்னார்-மாந்தை சந்தியில் அமைக்கப்பட்டிருந்த  திருகேதீஸ்வர ஆலயத்தின் அலங்கார நுழைவாயில்; உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரனைகள் இன்று (29) வெள்ளிக்கிழமை மன்னார் நீதிமன்றத்தில் இடம் பெற்றது.இதன் போது சந்தேக நபர்கள் 10 பேரூம் மன்றில் முன்னிலையாகி இருந்தனர்.

இதன் போது விசாரனைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த வழக்கு விசாரனையை எதிர்வரும் யூன் மாதம் 28 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.

இதே வேளை குறித்த வழக்கு விசாரனை இன்றைய தினம் விசாரனைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போது  அருட்தந்தையர்கள், மக்கள், என பல நூற்றுக்கணக்கானவர்கள் நீதிமன்ற பகுதிக்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மாந்தை சந்தியில் அமைக்கப்பட்டிருந்த திருக்கேதீஸ்வர ஆலயத்தின் அலங்கார நுழைவாயில் உடைப்பு தொடர்பான வழக்கு விசாரனை ஒத்திவைப்பு-(படம்) Reviewed by Author on March 29, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.