மன்னார் நகர சபை மற்றும் மன்னார் பிரதேச சபையின் தவிசாளர்கள் சொந்தப் பிணையில் செல்ல மன்னார் நீதி மன்றம் அனுமதி-(படம்)
மன்னார் நகர சபையின் தலைவர் மற்றும் மன்னார் பிரதேச சபையின் தலைவர் ஆகிய இருவரையும் தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான சொந்தப் பிணையில் செல்ல மன்னார் நீதி மன்றம் இன்று வெள்ளிக்கிழமை 22அனுமதித்துள்ளது.
மன்னார் நகர சபைக்கும் மன்னார் பிரதேச சபைக்கும் தங்கள் எல்லை தொடர்பில் முறுகல் நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து மன்னார் பொலிசார் அமைதிக்கு பங்கம் ஏற்படுவதாகத் தெரிவித்து மன்னார் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
குறித்த வழக்கு இன்று வெள்ளிக்கிழமை 22மன்னார் நீதிமன்றத்தில் விசாரனைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன் போது மன்னார் நகர சபையின் தலைவர்,மன்னார் பிரதேச சபையின் தலைவர் மற்றும் மன்னார் நகர சபை, பிரதேச சபைகளின் உறுப்பினர்களும் மன்றில் பிரசன்னமாகி இருந்தனர்.
இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் ரீ.சரவணராஜா மன்னார் நகர சபையின் தலைவர் மற்றும் மன்னார் பிரதேச சபையின் தலைவர் ஆகிய இருவரையும் தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான சொந்தப் பிணையில் செல்ல அனுமதித்தார்.
குறித்த வழக்கு விசாரனை மீண்டும் எதிர்வரும் மே மாதம் 23 ஆம் திகதி விசாரனைகளுக்காக எடுத்துக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் நகர சபை மற்றும் மன்னார் பிரதேச சபையின் தவிசாளர்கள் சொந்தப் பிணையில் செல்ல மன்னார் நீதி மன்றம் அனுமதி-(படம்)
Reviewed by Author
on
March 22, 2019
Rating:
Reviewed by Author
on
March 22, 2019
Rating:





No comments:
Post a Comment