அண்மைய செய்திகள்

recent
-

7 தமிழர்கள் விடுதலை விவகாரம்: தமிழக அரசு முடிவை செயல்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு -


முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 பேர் விடுதலை குறித்த தமிழக அரசு முடிவை செயல்படுத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

7 தமிழர்களின் விடுதலை குறித்த தமிழக அரசின் பரிந்துரை கடந்த ஆண்டு செப்டம்பர் 9 ஆம் திகதி ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இந்நிலையில் தனது மகளின் திருமணத்திற்கு 6 மாதங்கள் பரோல் கோரியும், தமிழக அரசின் பரிந்துரையை 6 மாதமாக ஆளுநர் பரிசீலிக்கவில்லை என்றும் அது குறித்து பரிசீலணை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குற்றவாளிகளில் ஒருவரான நளினி சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதனை விசாரித்த உயர்நீதிமன்றம் 7 பேரின் விடுதலை குறித்த முடிவை செயல்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

7 தமிழர்கள் விடுதலை விவகாரம்: தமிழக அரசு முடிவை செயல்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு - Reviewed by Author on April 26, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.