முழு அதிகாரம் பாதுகாப்பு தரப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது-பிரதமர் ரணில் விக்ரமசிங்க
அவசரகாலச் சட்டம் மற்றும் ஊரடங்குச் சட்டத்தை மீறிச் செயற்படுவோருக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதற்கான முழு அதிகாரமும், பாதுகாப்புத் தரப்பினருக்கு வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களுக்கு இன்றிரவு ஆற்றிய விசேட உரையின் போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,
“சர்வதேசப் பயங்கரவாதத்தின் விளைவாக, ஏப்ரல் 21ம் திகதி இடம்பெற் தற்கொலை குண்டு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை, பாதுகாப்புத் தரப்பினர், மிகவும் வெற்றிகரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
இதனால், பலரை சட்டத்தின் முன் கொண்டுவந்துள்ளனர். நாட்டின் அச்சுறுத்தலான நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிந்துள்ளது.
நாட்டுக்குள் சமாதானம் சீர்குழைக்கப்பட்டு, இனவாதப் பிரச்சினைகள் கொண்டுவரப்பட்டால், இந்த நாடு பலவீனமடையுமென்றும் இவ்வாறான நிலைமையொன்று ஏற்பட்டால், அது, பாதுகாப்புத் தரப்பினரின் விசாரணைகளுக்குத் தடையாக அமையும்.
சில இடங்களில் குழப்பங்களை விளைவிக்கவும் அமைதியைச் சீர்குழைக்கவும், சில குழுக்கள் செயற்பட்டு வருகின்றனர். இதனால், பாதுகாப்புத் தரப்பினரை பலவீனப்படுத்துவதே, அக்குழுக்களின் நோக்கமாகும்” என அவர் மேலும் தெரிவித்தார்.
முழு அதிகாரம் பாதுகாப்பு தரப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது-பிரதமர் ரணில் விக்ரமசிங்க
Reviewed by Author
on
May 14, 2019
Rating:

No comments:
Post a Comment