பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப அச்சப்படும் தென்னிலங்கை அரசியல்வாதிகள்!
இரண்டாம் தவணைக்காக பாடசாலைகளில் கல்வி நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எனினும் தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதில் அரசியல்வாதிகள் அச்சமடைந்துள்ளனர்.
கொழும்பில் பிரதான பாடசாலைகளில் கல்வி கற்கும் அரசியல்வாதிகள் ஒருவரினதும் பிள்ளைகள் பாடசாலை செல்லவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதான செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பாதுகாப்பு நிலைமை சிறப்பாக இருப்பின் முதலில் தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பி சிறந்த முன்னுதாரணத்தை அரசியல்வாதிகள் வெளிப்படுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை நேற்று முன்தினம் பாடசாலைக்கு வருகைத்தந்த மாணவர்களின் எண்ணிக்கையை விடவும் நேற்றைய தினம் பாடசாலை வருகைத்தந்த மாணவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
எனினும் சில பாடசாலைகளில் நேற்று முன்தினம் வருகைத்தந்த மாணவர்களின் எண்ணிக்கையை விட நேற்று குறைவான மாணவர்கள் வருகைத்தந்துள்ளனர்.
தற்போது ஏற்பட்டுள்ள அச்ச நிலைமை நாளுக்கு நாள் சீராகி வரும் கல்வி அமைச்சின் அதிகாரி ஒருவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
கடந்த 21ம் திகதி நாட்டில் ஏற்பட்ட தொடர் தற்கொலை குண்டுவெடிப்பினால் ஏற்பட்ட அச்சம் காரணமாக, இரண்டாம் தவணைக்கான பாடசாலைகளை திறப்பதில் சிக்கல் நிலை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப அச்சப்படும் தென்னிலங்கை அரசியல்வாதிகள்!
Reviewed by Author
on
May 08, 2019
Rating:

No comments:
Post a Comment