இலங்கையில் குண்டு வெடிப்புகள் தொடரலாம்!! அமெரிக்க தூதுவரிடம் இருந்து வந்த பேரிடியான செய்தி -
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்பிலிட்ஸை மேற்கோள்காட்டி ரொய்ட்டர் செய்தி சேவை (REUTERS.COM) இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
அந்த செய்தியில் மேலும்,
தாக்குதல்களுடன் தொடர்புபட்டவர்களை கைது செய்வதில் மிகச்சிறப்பான முன்னேற்றத்தை காண முடிந்துள்ளது. ஆனால் இந்த கதை முடிவடைந்துவிட்டது என நான் இன்னமும் கருதவில்லை.
இன்னமும் பல தாக்குதல்களை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன என நாங்கள் கருதுகின்றோம். அத்துடன் இன்னமும் தாக்குதல் நடக்க கூடிய பேராபத்து காணப்படுகின்றது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபட்ட குழுவினர் இன்னமும் முற்றாக செயலிழக்க செய்யப்படவில்லை என நாங்கள் கருதுவதற்கான காரணங்கள் உள்ளன என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் குறிப்பிட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கையில் குண்டு வெடிப்புகள் தொடரலாம்!! அமெரிக்க தூதுவரிடம் இருந்து வந்த பேரிடியான செய்தி -
Reviewed by Author
on
May 01, 2019
Rating:

No comments:
Post a Comment