அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் விடத்தல்தீவில் படையினர் கடும் சோதனை-டெட்டனேட்டர் குச்சிகளுடன் 4 பேர் கைது-படங்கள்

அடம்பன் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட விடத்தல்  தீவு கிராமத்தில் இன்று செவ்வாய்க்கிழமை 30-04-2019 காலை 6 மணி முதல் முப்படையினர் இணைந்து திடீர் சுற்றிவளைப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

விடத்தல் தீவு பகுதியில் நேற்று திங்கட்கிழமை29-04-2019  மாலை டெட்டனேட்டர் குச்சிகளுடன் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையிலே முப்படையினர் இணைந்து குறித்த சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

வீடுகளுக்குச் சென்ற படையினர் வீடுகளை முழுமையாக சோதனையிட்டதோடு,வீட்டில் உள்ளவர்களின் விபரங்களையும் பெற்றுக்கொண்டனர்.

மேலும் விடத்தல் தீவு கிராமத்தில் உள்ள பிரதான வீதிகளில் வீதித்தடைகள் அமைக்கப்பட்டு வாகனங்கள் கடும் சோதனைக்கு உற்படுத்தப்பட்டுள்ளது.

-கைது செய்யப்பட்ட விடத்தல் தீவைச் சேர்ந்த 4 பேர் இராணுவத்தினரினால் அடம்பன் பொலிஸாரிடம் மேலதிக விசாரனைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

அடம்பன் பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருவதோடு,விசாரனைகளின் பின்னர் குறித்த 4 சந்தேக நபர்களையும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மன்னார் பிரதான பாலத்தினுடாக உள்வரும்,வெளிச்செல்லும் அனைத்து வாகனங்களும் கடும் சோதனைகளுக்கு உற்படுத்தப்பட்டு வருவதோடு,மக்களின் அடையாள அட்டைகளும் பரிசோதனைக்கு உற்படுத்தப்பட்டு வருகின்றது.

மன்னார் நகரில் உள்ள பல்வேறு கிராமங்களிலும் படையினர் இன்று செவ்வாய்க்கிழமை காலை முதல் மதியம் வரை வீடு வீடாகச் சென்று கடும் சோதனைகளையும், தேடுதல்களையும் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.







மன்னார் விடத்தல்தீவில் படையினர் கடும் சோதனை-டெட்டனேட்டர் குச்சிகளுடன் 4 பேர் கைது-படங்கள் Reviewed by Author on May 01, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.