வவுனியா கங்கங்குளத்தில் பெண்ணொருவர் கொலை -
வவுனியா - செட்டிகுளம், கங்கங்குளம் கிராமத்தில் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கங்கங்குளத்தில் வசித்து வந்த நான்கு பிள்ளைகளின் தாயே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இக்கொலைக்கும், உயிரிழந்த பெண்ணின் கணவனுக்கும் தொடர்பிருப்பதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
நீண்ட நாட்களாக கணவன் மனைவி பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் அண்மைக்காலமாக மனைவி கங்கங்குளத்தில் தனியாக வீடொன்றில் வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.
இந்நிலையில் குறித்த பெண் எவ்வாறு கொலை செய்யப்பட்டார், என்ன காரணத்திற்காக கொலை செய்யப்பட்டார் என்ற கோணத்தில் செட்டிகுளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
வவுனியா கங்கங்குளத்தில் பெண்ணொருவர் கொலை -
Reviewed by Author
on
June 22, 2019
Rating:

No comments:
Post a Comment