புலிகளின் தலைவர் பிரபாகரனின் இந்த பண்பு அனைவரிடமும் இருக்க வேண்டும்! அனந்தி சசிதரன் -
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் விட்டுக் கொடுப்பும், நல்லென்னணமும் சகலரிடமும் இருக்க வேண்டும் என வடமாகாண முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
“குற்றங்கள் காணுவதாக இருந்தால், அனைத்துக் கட்சிகள் மீதும் குற்றங்களைக் கண்டுகொண்டே இருக்கலாம். எனினும், அதனை தவிர்த்து புரிந்துணர்வின் அடிப்படையில் செயற்பட வேண்டும்.
“இந்நிலையில், வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான புதிய கூட்டணிக்குள், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வர வேண்டும்.
ஈ.பி.ஆர்.எல்.எப் வந்தால் தாம் வரமாட்டோம் என்ற முன்னணியின் நிலைப்பாட்டை அவர்கள் மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என அனந்தி சசிதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
புலிகளின் தலைவர் பிரபாகரனின் இந்த பண்பு அனைவரிடமும் இருக்க வேண்டும்! அனந்தி சசிதரன் -
Reviewed by Author
on
July 28, 2019
Rating:

No comments:
Post a Comment