கர்ப்பிணிப் பெண்களே! சுகபிரசவத்திற்கு இதோ எளிய வழிகள் -
அந்தவகையில் பிரசவத்தின் போது கடைப்பிடிக்க வேண்டிய சில எளிய வழிமுறைகளை பற்றி இங்கு பார்ப்போம்.

- கர்ப்பிணிப் பெண்கள் மாதுளையை அதிகம் சாப்பிட வேண்டும். கர்ப்பகால வாந்தி, ரத்தசோகை, முதல் ட்ரைமெஸ்டரில் சிலருக்கு ஏற்படும் ரத்தச் சொட்டுக்கள் என அனைத்துக்கும் மாதுளை தீர்வு அளிக்கும்.
- காரணமற்ற வெள்ளைப்போக்குக்கு, முளைகட்டிய வெந்தயக் கஞ்சி, உளுந்தங்கஞ்சி சிறந்த தீர்வைத் தருபவை.
- கர்ப்பகால ஆரம்பத்தில் ஏற்படும் ரத்தக்கசிவு, கர்ப்பப்பையில் ஏற்படும் தேவையற்ற சுருக்கம் ஆகியவற்றுக்கு கொட்டையுள்ள கறுப்பு பன்னீர் திராட்சை நல்லது.
- ஃபோலிக் அமிலம் நிறைந்த தாமரைப்பூ, தக்கோலம், நெய்தல் கிழங்கு, செங்கழுநீர்க் கிழங்கு ஆகியவை எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் இதில் வலி நிவாரணியாகவும் வைரஸ்களுக்கு எதிராகச் செயல்படும் ஆற்றலும் இரும்பு மற்றும் கனிமச் சத்துக்கள் நிறைந்தவை ஆகும்.
- வண்ணங்கள் நிறைந்த பழங்கள், கீரை, மீன், முட்டை, பால், கேழ்வரகு, கைக்குத்தல் அரிசி சாதம் ஆகியவை கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிடவேண்டியவை.
- முருங்கைக்கீரை, பாசிப் பருப்பு கலந்த பொரியல், கேழ்வரகு அடை போன்றவற்றை சாப்பிடலாம்.
- கர்ப்ப காலத்தில் ஏற்படும் மலச்சிக்கலுக்கு தினமும் நான்கு லிட்டர் தண்ணீர், அத்திப்பழம், வாழைத்தண்டு பச்சடி, கனிந்த வாழைப்பழம், இரவில் கடுக்காய் பிஞ்சு ஆகியவற்றைச் சாப்பிட்டால், இந்தப் பிரச்னைகளில் இருந்து விடுபடலாம்.
- கர்ப்ப காலத்தில் மட்டும் சில பெண்களுக்கு சர்க்கரைநோய் (Gestational Diabetes) ஏற்படும். இதற்கு வெள்ளைச் சர்க்கரை சேர்க்காத உணவையும் கொடுக்கவேண்டியது அவசியம்.
- தினமும் உணவில் வெந்தயத்தையும் கறிவேப்பிலைப் பொடியையும் சேர்த்துக்கொள்வது கூடுதலாக நல்லது.
கர்ப்பிணிப் பெண்களே! சுகபிரசவத்திற்கு இதோ எளிய வழிகள் -
Reviewed by Author
on
July 03, 2019
Rating:
No comments:
Post a Comment