அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் ஆயரால்-காத்தான்குளத்தில் புனித.சூசையப்பர் ஆலயம் அபிஷேகம் செய்யப்பட்டு வழிபாடுகளுக்காக திறந்து வைப்பு-படங்கள்


மன்னார் மறைமாவட்டத்தின் காத்தான்குளம் பங்கின்  பல வருட வரலாறு கொண்ட அதாவது 1650ம் ஆண்டளவில் சிற்றாலயமாக இருந்துவந்த புனித சூசையப்பர் ஆலயமானது யுத்தகாலத்தில் சேதமாக்கப்பட்ட நிலையிலும் இன்றைய கால மக்களின் ஆலய வருகையின் தொகையை முன்னிட்டும் ஏழு வருடங்களுக்கு முன்பு அன்றைய பங்கு தந்தை அருட்பணி செ.வசந்தகுமார் தலைமையில் முன்னாள் மன்னார் மறைமாவட்ட ஆயர் கலாநிதி இராயப்பு யோசேப் ஆண்டகையினால் அடிக்கல் நாட்டப்பட்டு இன்றைய பங்குத் தந்தை அருட்பணி யே.அமல்ராஜ் தலைமையில் புதிய ஆலயம் நிர்மானிக்கப்பட்டு நேற்று  சனிக்கிழமை (27.07.2019) மன்னார் மறைமாவட்ட மேதகு ஆயர் இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகையினால் அபிஷேகம் செய்யப்பட்டு வழிபாடுகளுக்காக திறந்து வைக்கப்பட்டது.

ஆயர் வரவேற்கப்படுவதையும், ஆயர் ஆலயத்தை திறந்து வைத்து
அபிஷேகம் செய்து திருப்பலி ஒப்புக்கொடுப்பதையும், கலந்து கொண்ட
பக்தர்களின் ஒரு பகுதினரையும் மற்றும் ஆலயத்தை கட்டியெழுப்பிய பங்கு
தந்தையை ஆயர் பொன்னாடை போர்த்தி கௌரவிப்பதையும்  காணலாம்.











மன்னார் ஆயரால்-காத்தான்குளத்தில் புனித.சூசையப்பர் ஆலயம் அபிஷேகம் செய்யப்பட்டு வழிபாடுகளுக்காக திறந்து வைப்பு-படங்கள் Reviewed by Author on July 28, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.