மன்னார் பெனிலுக்கு இந்தியாவில் இரண்டு விருது-
பூவரசி காலை இலக்கிய விருது வழங்கும் விழா சென்னையில் கோயம்பேடு விஜய் பார்க் கோட்டலில் 18.08.3019 அன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இன் நிகழ்வில் பல்வேறு துறைகளில் உள்ளவர்களுக்கு அவர்களை ஊக்குவித்து பெருமைப் படுத்தும் விதமாக விருது வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
மூன்று அரங்கமாக நடைபெற்ற நிகழ்வில் ஓவியக் கண்காட்சியும் நூல் வெளியீடும் விருது வழங்கலுமாக நடைபெற்றது.
இந்தியாவில் பல மாவட்டங்களில் இருந்தும் இலங்கையிலும் இருந்தும் ஏனைய சில வெளி நாடுகளிலும் இருந்து பலரும் கலந்துகொண்டார்கள்.
இவ்நிகழ்வில் இலங்கையில் இருந்து சில கலைஞர்களும் இவ்விருதினை பெற்றிருந்தனர்.
இவ்விழாவில் எமது மன்னார் மாவட்டத்தின்
பிரான்சிஸ் பெனில் (மன்னார் பெனிலுக்கு)"பூவரசி தன்னம்பிக்கை"விருது வழங்கி கௌரவித்தனர்.
மாற்றுத்திறனாளியான பிரான்சிஸ் பெனில் (மன்னார் பெனிலுக்கு) அவருடைய தன்னம்பிக்கை கொண்டு இலக்கியத்தில் சிறப்பாக பயணிப்பதால் "பூவரசி தன்னம்பிக்கை" விருது வழங்கி கெளரவித்தனர் தமிழ்நாடு இலக்கிய பெருமன்றம் காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டம் திரு வீரமணி அவர்களால் தமிழாற்றுப்படை இலக்கிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக நாமும் வாழ்த்துகின்றோம்
-வை.கஜேந்திரன்-
மன்னார் பெனிலுக்கு இந்தியாவில் இரண்டு விருது-
Reviewed by Author
on
August 31, 2019
Rating:

No comments:
Post a Comment