தேற்றாத்தீவு நாகதம்பிரான் ஆலய தீர்த்த உற்சவம் -
இந்துக்களினதும் தமிழர்களினதும் பழமையான வழிபாடுகளில் ஒன்றான நாக வழிபாட்டின் முக்கிய தினமான நாகசதுர்த்தியை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள நாகதம்பிரான் ஆலயங்களில் இன்று விசேட நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.
கிழக்கு மாகாணத்தில் மிகவும் பழமையான நாகதம்பிரான் ஆலயமான மட்டக்களப்பு தேற்றாத்தீவு அருள்மிகு ஸ்ரீ நாகதம்பிரான் ஆலயத்தின் நாகசதுர்த்தி தீர்த்தோற்சவம் இன்று காலை இந்துமா சமுத்திரத்தில் நடைபெற்றது.
நாகசதுர்த்தியை முன்னிட்டு கடந்த 01.08.2019 வியாழக்கிழமை இரவு அன்று ஆலய வருடந்த அலங்கார உற்சவம் ஆரம்பமாகியது.
இந்த உற்சவத்தில் வெள்ளிக்கிழமை பாலாபிஷேகமும் நேற்று சனிக்கிழமை சப்புர ஊர்வலமும் இன்று காலை இந்து சமுத்திரத்தில் தீர்த்த உற்சவமும் நடைபெற்றது.
இன்று காலை ஆலயத்தில் விசேட பூஜைகள் நடைபெற்று சுவாமி ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு சமுத்திரக்கரையில் தீர்த்தோற்சவ கிரியைகள் நடைபெற்றதை தொடர்ந்து தீர்த்தோற்சவம் சிறப்பாக நடைபெற்றது.
இந்த தீர்த்தோற்சவத்தில் மட்டக்களப்பின் பல்வேறு இடங்களிலும் இருந்து பல நூற்றுக்கண்கான அடியார் கலந்து கொண்டனர்.
தேற்றாத்தீவு நாகதம்பிரான் ஆலய தீர்த்த உற்சவம் -
Reviewed by Author
on
August 05, 2019
Rating:

No comments:
Post a Comment