இன்று கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறேன்... ஆனால் அன்று நான் பசியால் வாடிய போது? ரொனால்டோ நெகிழ்ச்சி -
தற்போது இருக்கும் விளையாட்டு உலகில் கோடிக்கணக்கில் சம்பளங்களை குவிப்பவர்களின் வரிசையில் போர்ச்சுகளைச் சேர்ந்த கிறிஸ்டியன் ரோனால்டோவும் ஒருவர், கால்பந்து உலகில் கொடி கட்டி பறக்கும் இவர் தான் தங்கும் ஹோட்டல்களில் ஊழியர்களுக்கு லட்சக்கணக்கில் டிப்ஸ் கொடுத்து இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்துவார்.
அதுமட்டுமின்றி டின்னர், பார்ட்டி என பணத்தை தண்ணீராக செலவழிப்பார் என்று கூறுவார், அந்தளவிற்கு தற்போது இவருக்கு வருமானம் கிடைக்கிறது.

இப்போது கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் ரொனால்டோ, தன்னுடைய சிறுவயதில் பர்கர் வாங்கி சாப்பிடும் அளவிற்கு கூட பணம் இல்லாமல் தவித்துள்ளார்.
சிறுவயதில் பயிற்சி முடிந்த பின்னர் சாப்பிட்டிற்கு உணவு இல்லாம் பசியால் வாடியுள்ளார். அப்போது அருகில் உள்ள மெக்டெனால்டில் வேலைப்பார்த்த பெண்மணிதான் அவருக்கு உதவியுள்ளார்.
இதை அவர் சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

அதில், போர்ச்சுக்கல் லிஸ்பன் ஸ்போர்ட்டிங்கில் சிறுவனாக இருந்த போது, பயிற்சி முடிந்த பின்னர் பசியாக இருக்கும்.
அப்போது, நாங்கள் இருக்கும் கட்டிடத்திற்கு அருகில் மெக்டொனால்டு இருக்கும். இதனால் நாங்கள் அங்கு சென்று கதவை தட்டுவோம். அங்குள்ளவர்களிடம் பர்கர் இருந்தால் கொடுங்கள் என்று கேட்போம். அதில், எட்னா என்ற பெண் எனக்கு பர்கர் கொடுத்து உதவினார்.

அதை என்னால் மறக்க முடியவில்லை, அவருக்கு நான் எதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன், அவரோடு சேர்ந்து இரண்டு பெண்கள் இருப்பார்கள், அவர்கள் எங்கிருக்கிறார்கள் தெரியவில்லை,
அவர்களை கண்டுபிடித்து டுரின் அல்லது லிஸ்பனில் டின்னர் கொடுக்க விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.
இன்று கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறேன்... ஆனால் அன்று நான் பசியால் வாடிய போது? ரொனால்டோ நெகிழ்ச்சி -
Reviewed by Author
on
September 22, 2019
Rating:
No comments:
Post a Comment