அண்மைய செய்திகள்

recent
-

தேசிய மட்ட கணிதப் போட்டியில் முதலிடம் பெற்ற வடக்கு மாணவர்கள் -


அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட கணிதப் புதிர் போட்டியில் கனிஷ்ட பிரிவில் வட மாகாண அணியினர் முதலிடத்தைப் பெற்றுள்ளனர்.

கொழும்பில் நேற்று குறித்த போட்டி நடைபெற்றுள்ளது.
கனிஷ்ட பிரிவினருக்கான போட்டியில் வடக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவம் செய்த வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவர்கள் எம். ஜதுர்சன், ஜெ.லிவிந்,சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவன் ஜி.சாகித்தன், வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலய மாணவி பி.சர்றினி, அருணோதயாக் கல்லூரி மாணவன் எம்.அபிசயன், யாழ்.இந்துக் கல்லூரி மாணவன் எஸ்.அபிசைசன், பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மாணவன் கபிநயன் மற்றும் கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவன் வி.தணிகைக்குமரன் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றியீட்டியுள்ளனர்.
இந்த போட்டியில் இரண்டாம் இடத்தை கிழக்கு மாகாண அணியும், மூன்றாம் இடத்தை மேல் மாகாண அணியும் பெற்றுக்கொண்டன.

தேசிய மட்ட கணிதப் போட்டியில் முதலிடம் பெற்ற வடக்கு மாணவர்கள் - Reviewed by Author on September 20, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.