அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் ஜனவரி மாதம் நடாத்தப்படவுள்ள 'மன்னார் பிறீமியர் லீக்' உதை பந்தட்ட போட்டி தொடர்பில் உரிமையாளர்களுடன் விசேட சந்திப்பு-படம்

மன்னார் மாவட்ட உதைபந்தாட்ட லீக்கினால் எதிர் வரும் 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 'மன்னார் பிறீமியர் லீக் 'என்னும் மாபெரும் உதை பந்தாட்ட சுற்றுப்போட்டியானது நடாத்தப்படவுள்ள நிலையில் குறித்த போட்டியில் பங்குபற்றவுள்ள 10 அணிகளை கொள்வனவு செய்த உரிமையாளர்கள் மற்றும் பிரதி நிதிகளுக்கும்,மன்னார் மாவட்ட உதைபந்தாட்ட லீக்கிற்கும் இடையில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணியளவில் மன்னார் நகர மண்டபத்தில் விசேட சந்திப்பு இடம் பெற்றது.

மன்னார் மாவட்ட உதைபந்தாட்ட லீக்கின் தலைவர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தலைமையில் குறித்த சந்திப்பு இடம் பெற்றது.

குறித்த சந்திப்பில் மன்னார் மாவட்ட உதைபந்தாட்ட லீக்கின் செயலாளர் ப.ஞானராஜ், மன்னார் மாவட்ட உதைபந்தாட்ட லீக் பிரதி நிதிகள்,அணிகளை கொள்வனவு செய்த உரிமையாளர்கள், முகாமையாளர்கள் , உதவியாளர்கள், பிரதி நிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

-இதன் போது எதிர்வரும் ஜனவரி மாதம் இடம் பெறவுள்ள மன்னார் பிறீமியர் லீக் சுற்று போட்டி தொடர்பாகவும்,உரிமையாளர்களின் செயற்பாடுகள்,வீரர்கள் தெரிவு செய்யும் முறை தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.

-மேலும் எதிர்வரும் ஜனவரி மாதம் 14 ஆம் திகதி குறித்த போட்டி மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் விமர்சையாக ஆரம்பிக்கப்படவுள்ளது.
இப்போட்டியானது சுமார் 48 இலட்சம் ரூபாய் நிதி செலவீட்டில் இடம் பெறவுள்ளது.பங்கு பற்றும் சகல அணிகளுக்கும் பெறுமதி வாய்ந்த பரிசில்கள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.







மன்னாரில் ஜனவரி மாதம் நடாத்தப்படவுள்ள 'மன்னார் பிறீமியர் லீக்' உதை பந்தட்ட போட்டி தொடர்பில் உரிமையாளர்களுடன் விசேட சந்திப்பு-படம் Reviewed by Author on October 28, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.