தேர்தலில் தமது பெயரை பயன்படுத்த வேண்டாம் என கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார்.
தேர்தல் காலத்தில் தனது பெயரைப் பயன்படுத்தி அரசியல் கட்சிகளும் பல்வேறு தரப்பினரும் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஊடகமொன்றுக்கு அண்மையில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,
இவ்வாறு போலிப் பிரச்சாரங்களை மேற்கொள்வதனை அனைவரும் தவிர்த்து கொள்ள வேண்டும். அரசியல் கட்சிகளுக்கு சாதக நிலைமை ஏற்படும் வகையில் எனது பெயரை பயன்படுத்தி பிரச்சாரம் நடத்தப்படுகின்றது.
சமூக ஊடகங்களில் எனது பெயரைப் பயன்படுத்தி இவ்வாறான பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஒவ்வொரு தனிப்பட்ட நபர்களினாலும் உருவாக்கப்படும் முகநூல் பதிவுகள் மற்றும் ஏனைய சமூக ஊடகப் பிரச்சாரங்களுக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் கியைடாது.
எனது பெயரையும் எனது புகைப்படத்தையும் பயன்படுத்தி பிரச்சாரம் செய்ய வேண்டாம். அது மிகவும் அநீதியான செயற்பாடு.
பல்வேறு தேவைகளுக்காக பல்வேறு அரசியல் தலைமைகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினாலும் அது அவர்களுக்கு நான் வழங்கும் ஆதரவாக அர்த்தப்பட்டு விடாது என கூறியுள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அனைத்து பிரதான கட்சிகளின் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கட்சித்தாவல்கள் மற்றும் ஆதரவுகள் அரசியல் அரங்கில் பரவலாக நடைபெற்று வருவதை காணக்கூடியதாக உள்ளது.
இருந்தபோதிலும், ஒரு சிலர் வேட்பாளராக தகுதியுடையவர்களா என்பது தொடர்பில் கேள்வி நிலவுகிறது.எந்த கட்சியாக இருந்த போதிலும் இம்முறை ஜனாதிபதி தேர்தலை வெற்றிகொள்ள 25 % தமிழ்மக்களின் வாக்குகளை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் வேட்பாளர்களா உள்ளனர். ஜனாதிபதி தேர்தலின் வெற்றியை தீர்மானிக்கப்போகும் சக்திகளாக தமிழ் மக்களின் வாக்குகளே உள்ளன.
வடக்கு மற்றும் கிழக்கில் பிரதான கட்சியாக விளங்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு இந்த தேர்தலில் யாருக்கு என்பது தொடர்பில் இன்னும் அறிவிக்கவில்லை.
தமிழ் மக்களின் வாக்குகளை பெறுவதற்காக தேர்தலில் போட்டியிடும் பிரதான கட்சிகள் அனைத்தும் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன. ஆனால், இதுதொடர்பில் இதுவரையில் கூட்டமைப்பு எந்தவொரு தீர்மானங்களையும் எடுக்கவில்லை.
இது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை எமது செய்தி பிரிவு தொடர்புகொண்டு வினவிய போது,
எதிர்வரும் தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பிலான முடிவை கூட்டமைப்பு இன்னும் எடுக்கவில்லை. இது தொடர்பில் கட்சியின் அனைத்து உறுப்பினர்களுடனும் கலந்தாலோசித்து வருகின்றோம். தகுந்த நேரத்தில் சரியான முடிவை எடுத்த பின்னர் அது தொடர்பில் அறிவிப்போம் என தெரிவித்தார்.
தேர்தல் காலத்தில் தனது பெயரைப் பயன்படுத்தி அரசியல் கட்சிகளும் பல்வேறு தரப்பினரும் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஊடகமொன்றுக்கு அண்மையில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,
இவ்வாறு போலிப் பிரச்சாரங்களை மேற்கொள்வதனை அனைவரும் தவிர்த்து கொள்ள வேண்டும். அரசியல் கட்சிகளுக்கு சாதக நிலைமை ஏற்படும் வகையில் எனது பெயரை பயன்படுத்தி பிரச்சாரம் நடத்தப்படுகின்றது.
சமூக ஊடகங்களில் எனது பெயரைப் பயன்படுத்தி இவ்வாறான பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஒவ்வொரு தனிப்பட்ட நபர்களினாலும் உருவாக்கப்படும் முகநூல் பதிவுகள் மற்றும் ஏனைய சமூக ஊடகப் பிரச்சாரங்களுக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் கியைடாது.
எனது பெயரையும் எனது புகைப்படத்தையும் பயன்படுத்தி பிரச்சாரம் செய்ய வேண்டாம். அது மிகவும் அநீதியான செயற்பாடு.
பல்வேறு தேவைகளுக்காக பல்வேறு அரசியல் தலைமைகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினாலும் அது அவர்களுக்கு நான் வழங்கும் ஆதரவாக அர்த்தப்பட்டு விடாது என கூறியுள்ளார்.
Reviewed by Author
on
October 04, 2019
Rating:
No comments:
Post a Comment