நானாட்டான் பிரதேச செயலகத்தில் இடம் பெற்ற இரத்ததான முகாம்-படங்கள்
அமரத்துவம் அடைந்த நானாட்டான் பிரதேச சமூர்த்தி உத்தியோகத்தர் என்.ஸ்ரான்லிபோல் லெம்பேட் (சுமன்) அவர்களின் 4 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி நானாட்டான் பிரதேசச் செயலகத்தின் ஏற்பாட்டில் இன்று செவ்வாய்க்கிழமை17/12/2019 காலை நானாட்டான் பிரதேசச் செயலகத்தில் இரத்ததான முகாம் இடம் பெற்றது.
நானாட்டான் பிரதேச செயலாளர் கிறிஸ்கந்தகுமார் தலைமையில் இடம் பெற்ற குறித்த இரத்ததான முகாமில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் இரத்த வங்கி பிரிவினர் மற்றும் வைத்தியர்கள் கலந்து கொண்டனர்.
இதன் போது நானாட்டான் பிரதேச செயலக பணியாளர்கள்,சமூர்த்தி உத்தியேகத்தர்கள் பொது மக்கள் என பலர் கலந்து கொண்டு இரத்ததானம் செய்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.
நானாட்டான் பிரதேச செயலகத்தில் இடம் பெற்ற இரத்ததான முகாம்-படங்கள்
Reviewed by Author
on
December 17, 2019
Rating:

No comments:
Post a Comment