கோட்டபாயவின் எண்ணக்கருவுக்கமைய பல்கலைக்கழக மாணவர்களுக்கான நடவடிக்கை -
பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை 50 ஆயிரம் வரை அதிகரிப்பதே அரசாங்கத்தின் இலக்காகும் என்று அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கொள்கைப் பிரகடனத்திற்கு அமைய கூடுதலான மாணவர்களுக்கு உயர்கல்விக்கான சந்தர்ப்பத்தைப் பெற்றுக் கொடுப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.
இது தொடர்பில் மேற்கொள்ளக்கூடிய எதிர்கால நடவடிக்கைகள் குறித்து பல்கலைக்கழக உபவேந்தர்களிடமிருந்து தாம் அறிக்கையொன்றைக் கோரியிருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்த அறிக்கை அடுத்த வாரம் கிடைக்க உள்ளது. இதற்கு மேலதிகமாக பல்கலைக்கழக விஞ்ஞான கற்கை நெறிகளை தொடரும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரித்து அவற்றின் கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்தவும் திட்டமிட்டிருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் Z ஸ்கோர் புள்ளி முறை தொடர்பில் பரிந்துரைக்கப்பட்ட வேலைத்திட்டம் எதிர்வரும் 2 வருட காலத்திற்கு நடைமுறைப்படுத்தப்படும்.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற்ற உயர்தரப் பரீட்சைக்கு இந்த முறை பொருந்தாது. தற்போது நடைமுறைப்படுத்தப்படும் Z ஸ்கோர் முறை நடைமுறையின் மறுசீரமைக்கு முறையாக முன்னெடுக்கப்பட வேண்டும். இது தொடர்பாக கல்விப் பொதுத் தராதரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களை தெளிவுபடுத்த வேண்டுமென்றும் அமைச்சர் பந்துல குணவர்த்தன குறிப்பிட்டார்.
கோட்டபாயவின் எண்ணக்கருவுக்கமைய பல்கலைக்கழக மாணவர்களுக்கான நடவடிக்கை -
Reviewed by Author
on
December 16, 2019
Rating:

No comments:
Post a Comment