மன்னார் சுகாதார தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்த பொறியியலாளர் எஸ்.விமலேஸ்வரன்-படம்
மன்னார் நகர சபையில் கடமையாற்றும் சுகாதார தொழிலாளர்களின் பிள்ளைகளின் நலன் கருதி அவர்களுக்கான பாடசாலை கற்றல் உபகரணங்களை பொறியியலாளர் எஸ்.விமலேஸ்வரன்அவர்களினால் நேற்று வியாழக்கிழமை 02/12/2019 மாலை வைபவ ரீதியாக வழங்கி வைத்தார்.
-மன்னார் நகர சபையின் தலைவரின் வேண்டு கோளுக்கு அமைவாக குறித்த பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வு நேற்று வியாழக்கிழமை மாலை மன்னார் நகர மண்டபத்தில் இடம் பெற்றது.
இதன் போது மன்னார் நகர சபையில் கடமையாற்றும் அனைத்து சுகாதார தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கும் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் பொறியியலாளர் எஸ்.விமலேஸ்வரன் ,மன்னார் நகர சபையின் தலைவர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன்,நகர சபையின் செயலாளர் X.L.பிறிட்டோ உற்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ச்சியாக குறித்த பொறியியலாளர் வருடா வருடம் குறித்த உதவிகளை வழங்கி வைக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
-மன்னார் நகர சபையின் தலைவரின் வேண்டு கோளுக்கு அமைவாக குறித்த பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வு நேற்று வியாழக்கிழமை மாலை மன்னார் நகர மண்டபத்தில் இடம் பெற்றது.
இதன் போது மன்னார் நகர சபையில் கடமையாற்றும் அனைத்து சுகாதார தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கும் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் பொறியியலாளர் எஸ்.விமலேஸ்வரன் ,மன்னார் நகர சபையின் தலைவர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன்,நகர சபையின் செயலாளர் X.L.பிறிட்டோ உற்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ச்சியாக குறித்த பொறியியலாளர் வருடா வருடம் குறித்த உதவிகளை வழங்கி வைக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் சுகாதார தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்த பொறியியலாளர் எஸ்.விமலேஸ்வரன்-படம்
Reviewed by Author
on
January 04, 2020
Rating:

No comments:
Post a Comment