யாழ். பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவர்களின் வருடாந்த கண்காட்சி - T
யாழ். பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவர்கள் ஏற்பாடு செய்துள்ள வருடாந்த மாபெரும் கண்காட்சி (EXPO ARIVIYAL NAGAR-2020) இன்றையதினம் ஆரம்பமாகியுள்ளது.
இன்று காலை 08.30 மணியளவில் கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள யாழ். பல்கலைக்கழக பொறியியல் பீடத்தில் இந்த கண்காட்சி ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இக்கண்காட்சி ஆரம்ப நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண பல்கலைக்கழக தகுதி வாய்ந்த அதிகாரி பேராசிரியர் க.கந்தசாமி கலந்து கொண்டிருந்தார்.
இந்த நிகழ்வில், யாழ். பொறியியல்பீட மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் கண்காட்சி, இலவச மருத்துவ முகாம் (Medical Check-up and Dental Care), இரத்ததான முகாம், Battle ground Competition (For University of Jaffna, Kilinochchi Premises University Students) போன்றவற்றுடன், பாடசாலை மாணவர்களின் தொழிநுட்ப அறிவாற்றலை மேம்படுத்தும் வகையில் Arduino பயிற்சி பட்டறையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், வருகைதருவோர்களின் பொழுதுபோக்குகளுக்காக புகைப்பட நிகழ்வும் இசை நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.
இன்று ஆரம்பமான குறித்த கண்காட்சி நிகழ்வை காண்பதற்காக வவுனியா, திருகோணமலை உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களிலிருந்தும் மாணவர்கள் வருகை தந்திருந்தனர்.
இந்த கண்காட்சி இன்றும், நாளையும் காலை 8 மணிமுதல் பிற்பகல் 4 மணிவரை இடம்பெறவுள்ளதுடன், இவற்றை காண்பதற்கு கட்டணங்கள் அறவிடப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.
குறித்த கண்காட்சியில் குறைந்த செலவிலான மனைகள் அமைத்தல், நீர் முகாமைத்துவத்தினை பேணல், நவீன நகர திட்டம், நவீன போக்குவரத்து முறைமைகள், ரோபோக்கள், நவீன கட்டுமான துறை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய வகையில் பல்வேறு அம்சங்கள் இடம்பிடித்துள்ளன.
யாழ். பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவர்களின் வருடாந்த கண்காட்சி - T
Reviewed by Author
on
January 07, 2020
Rating:

No comments:
Post a Comment