தமிழமுது நண்பர்கள் வட்ட அமைப்பும் மாற்றுத்திறனாளிகள் சுயஉதவி தேனி அமைப்பின பொங்கல் விழா
மன்னார் மாவட்டத்தின் கல்விக்கான தனது சேவையினை 04வது வருடமாக தொடர்ந்துள்ள தமிழமுது நண்பர்கள் வட்டம் அமைபினர் புதிய வருடத்தில் 19-01-2020 அன்று மன்னார் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சுயஉதவி தேனி அமைப்பின் அமைப்பாளர் திரு.பெனில் அவர்கள் மற்றம் இலுப்பைக்கடவை மூணாம்பிட்டி கிராமத்தின் பொறுப்பாளர் திருமதி.ராஜீ ராஜகாந் ஒழுங்கமைப்பில் தமிழமுதுநண்பர்கள் வட்டத்தினர் இணைந்து மிகவும் சிறப்பாக பொங்கல் விழாவினை கொண்டாடினர்.
தமிழமுது நண்பர்கள் வட்டமானது வருடாவருடம் தமது பொங்கல் நிகழ்வினை….
- 2018 பட்டித்தோட்டம் சந்தோம் மூத்தோர் இல்லத்திலும்
- 2019 Mardp-மன்.மாற்றாற்றல் உள்ளோர் புனர்வாழ்வு சங்கம்
- 2020 மன். இலுப்பைக்கடவை மூணாம்பிட்டி கிராமத்திலும் கொண்டாடி உள்ளனர் நமது சந்தோசத்தினை நம்முடன் மட்டும் வைத்துக்கொள்ளாது பிறருடன் சேர்ந்து சந்தோசத்தினையும் சமத்துவத்தினையும் பேணுவதற்கான வழியில் செல்வதே சிறப்பான விடையம்.
தமிழமுது நண்பர்கள் வட்ட அமைப்பும் மாற்றுத்திறனாளிகள் சுயஉதவி தேனி அமைப்பின பொங்கல் விழா
Reviewed by Author
on
January 22, 2020
Rating:

No comments:
Post a Comment