மன்னார் -ஒரு கோடிக்கு மேல் பெறுமதி வாய்ந்த நாணயத்தாள்கள் மீட்பு
மன்னார் தலைமன்னார் பிரதான வீதி தாராபுரம் பகுதியில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பெறுமதியுடைய வெளிநாட்டு நாணயங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது
மன்னார் தாராபுரம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த ராணுவ சோதனை சாவடியில் சோதனை நடவடிக்கைகள் மேற்கொண்ட பொழுது மோட்டார் வாகனத்தில் வந்த நபர் சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்திய நிலையில் மோட்டார் வாகனத்தின் சீட்டின் கீழ் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு கோடிக்கும் அதிகமான பெறுமதியுள்ள அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டு நாணயங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது
சந்தேக நபரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் இன்னொரு நபரும்கைது செய்யப்பட்டுள்ளார் குறித்த இரு சந்தேக நபர்களும் மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்
மன்னார் பொலிஸார் குறித்த விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மன்னார் -ஒரு கோடிக்கு மேல் பெறுமதி வாய்ந்த நாணயத்தாள்கள் மீட்பு
Reviewed by Author
on
February 05, 2020
Rating:

No comments:
Post a Comment