9,00,000 மக்கள் இடம்பெயர்வு..! முகாம்கள் நிரம்பியதால் உறைபனியில் இறக்கும் குழந்தைகள்! கலங்கும் ஐ.நா -
சிரியாவின் வடமேற்கு பகுதியில் உள்ள கிளர்ச்சியாளர்களுக்கு முடிவு கட்ட ரஷ்யா ஆதரவு பெற்ற சிரியா அரசுப்படை, கடந்த ஆண்டு முதல் தீவிர தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இட்லிப் நகரம் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்வரப்பட்டதாக சமீபத்தில் சிரிய அரசு அறிவித்தது.
இந்நிலையில், வடமேற்கு சிரியாவில் நெருக்கடி பயங்கரமான புதிய நிலையை எட்டியுள்ளது என்று ஐ.நா. மனிதாபிமான விவகாரங்கள் மற்றும் அவசர நிவாரணத் தலைவர் மார்க் லோகாக் கூறினார்.
இடம்பெயர்ந்தவர்கள் பெருமளவில் பெண்கள் மற்றும் குழந்தைகள், முகாம்கள் நிரம்பியிருப்பதால் உறைபனி வெப்பநிலையில் அவர்கள் வெட்டவெளியில் தூங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
குழந்தைகளை சூடாக வைத்திருக்க தாய்மார்கள் பிளாஸ்டிக் எரிக்கின்றனர். குளிர் காரணமாக சிறு குழந்தைகள் இறந்து கொண்டிருக்கிறார்கள்.
அலெப்போ மாகாணத்தின் பகுதிகள் உட்பட இட்லிப் பிராந்தியத்தில் சுமார் மூன்று மில்லியன் மக்கள் வசிக்கின்றனர், அவர்களில் பாதி பேர் ஏற்கனவே நாட்டின் பிற பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்துள்ளனர்.
சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கும், அரசாங்கத்திற்கும் இடையே 2011 முதல் நடைபெற்று வரும் உள்நாட்டு போரில் இதுவரை 3,80,000க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
வடமேற்கில் வன்முறை கண்மூடித்தனமானது என்று லோகாக் திங்களன்று எச்சரித்தார்.
சுகாதார வசதிகள், பள்ளிகள், குடியிருப்பு பகுதிகள், மசூதிகள் மற்றும் சந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
பள்ளிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன, பல சுகாதார வசதிகள் மூடப்பட்டுள்ளன. நோய் பரவும் ஆபத்து உள்ளது. அடிப்படை உள்கட்டமைப்பு வீழ்ச்சியடைந்து வருகிறது என்று அவர் அறிக்கையில் தெரிவித்தார்.
இடம்பெயர்ந்த மக்களுக்கான குடியேற்றங்கள் பாதிக்கப்படுவதாக நாங்கள் இப்போது தகவல்களை பெற்று வருகிறோம், இதன் விளைவாக இறப்புகள், காயங்கள் மற்றும் மேலும் இடம்பெயர்வு ஏற்படுகிறது என மார்க் லோகாக் கூறினார்.
9,00,000 மக்கள் இடம்பெயர்வு..! முகாம்கள் நிரம்பியதால் உறைபனியில் இறக்கும் குழந்தைகள்! கலங்கும் ஐ.நா -
Reviewed by Author
on
February 18, 2020
Rating:

No comments:
Post a Comment