பிரித்தானியாவில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு முன்னால் பாரிய போராட்டம் -
பிரித்தானியாவில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு முன்னால் நூற்றுக்கணக்கான புலம்பெயர் மக்கள் இணைந்து இன்றையதினம் பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
இலங்கையின் 72ஆவது சுதந்திர தினம் இன்றையதினம் கொண்டாடப்படும் நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை வலியுறுத்தியும் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை ஐரோப்பியரின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்டு 72 ஆண்டுகள் பூர்த்தியாகின்ற போதும் ஈழத்தமிழர்களாகிய நாம் தொடர்ந்தும் காலணித்துவ ஆட்சி ஒன்றின் கீழே அடிமைகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
ஆண்ட பரம்பரையான நாம் அடங்கி ஒடுங்கிப் போய் இன்னொரு தேசத்தவரினால் அடக்கியாளப்படுவதனை நாம் விரும்பவில்லை என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், மக்கள் தமது சொந்த நிலங்களில் குடியமர்த்தப்பட வேண்டும். இனப்பரம்பலை மாற்றியமைக்கும் வகையிலான திட்டமிட்ட குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் நிலை கண்டறியப்பட வேண்டும். நீண்ட காலமாக சிறையில் வாடும் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும். தமிழர் தாயகத்தில் இடம்பெறும் நில ஆக்கிரமிப்புக்கள் நிறுத்தப்பட வேண்டும்.
இத்தகைய அடிப்படையான அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வுக்கான சர்வதேச அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும். சர்வதேசம் தமிழ் மக்களின் போராட்டத்தின் நியாயத் தன்மையினை புரிந்து கொள்ள வேண்டும் என்று இந்த போராட்டத்தின் போது பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
பிரித்தானியாவில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு முன்னால் பாரிய போராட்டம் -
Reviewed by Author
on
February 05, 2020
Rating:

No comments:
Post a Comment