அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் சதோச மனித புதைகுழி வழக்கின் எழுத்து மூல சமர்பணம் நிறைவு... 10 ஆம் திகதி தீர்ப்பு....

மன்னார் சதோச மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கின் எழுத்துமூல சமர்ப்பணம் இன்றையதினம் காணமல் ஆக்கப்பட்டோர் சார்பாக மன்னார் நீதவான் நீதிமன்ற பதிவாளர் ஊடாக  சமர்ப்பிக்கப்பட்டுள்ளது

 காணாமல் ஆக்கப்பட்டோர் சார்பாக வாதிடும் சட்டத்தரணிகள் ஊடாக  குறித்த சமர்ப்பணம் இன்றைய தினம் சமர்பிக்கப்பட்டுள்ளது

கடந்த மாதம் 25 திகதி மன்னார் மனித புதை குழி தொடர்பான வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் குறித்த வழக்கு தொடர்பான எழுத்து மூல சமர்பணத்தை இம்மாதம் 5 ஆம் திகதிக்கு முன்னர் காணாமல் ஆக்கப்பட்டோர் சார்பாக வாதிடும் சட்டத்தரணிகள் முன்வைக்க நீதவான் உத்தரவிட்டு இருந்த நிலையில் இன்றைய தினம் குறித்த  எழுத்து மூல சமர்பணம் கையளுக்கப்பட்டுள்ளது.

 குறித்த எழுத்து மூல சமர்பனத்தின் பின்னர் வருகின்ற 10 ஆம் திகதி குறித்த மன்னார் சதோச மனித புதை குழி வழக்கில் காணமல் ஆக்கப்பட்டோர் சார்பாக சட்டத்தரணிகள் வாதிட முடியுமா இல்லையா என்பது தொடர்பான தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.

மன்னார் சதோச மனித புதைகுழி வழக்கின் எழுத்து மூல சமர்பணம் நிறைவு... 10 ஆம் திகதி தீர்ப்பு.... Reviewed by Author on March 05, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.