அண்மைய செய்திகள்

recent
-

நாடு முழுவதும் தீவிரமாகும் கொரோனா: 54000 சிறைக்கைதிகளை விடுவிப்பதாக அறிவித்த ஈரான்!


கொரோனாவால் இறப்பு எண்ணிக்கை 92 ஐ எட்டியுள்ளதால் 54000 சிறைக்கைதிகளை விடுவிக்க உள்ளதாக ஈரான் அரசு அறிவித்துள்ளது.
COVID 19 வைரஸால் நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள மொத்த நோய்த்தொற்றுகள் 2,922 ஆக உயர்ந்துள்ளதாக தெஹ்ரான் புதன்கிழமையன்று அறிவித்தது.

இறப்பு எண்ணிக்கை 92 ஐ எட்டியிருக்கும் நிலையில், ஈரானின் முதல் துணை ஜனாதிபதி கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக இஸ்லாமிய குடியரசில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தொழுகைகள் ரத்து செய்யப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.
மேலும், கொரோனா சோதனையில் எதிர்மறையாக முடிவு வந்த 54000 சிறைக்கைதிகளுக்கு ஜாமீன் வழங்கி விடுவிப்பதாக நீதித்துறை அறிவித்துள்ளது. இதில், ஐந்து வருடங்களுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள 'பாதுகாப்பு கைதிகள்' மட்டும் அடங்க மாட்டார்கள் எனவும் கூறியுள்ளது.

நாடு முழுவதும் தீவிரமாகும் கொரோனா: 54000 சிறைக்கைதிகளை விடுவிப்பதாக அறிவித்த ஈரான்! Reviewed by Author on March 05, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.