அண்மைய செய்திகள்

recent
-

உலர் உணவு பொதிகளை வழங்கி முன் மாதிரியாக செயல்பட்ட மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் எஸ்.கேதீஸ்வரன்.

மன்னார் மாவட்டத்தில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் மூன்றாவது நாளாக இன்று (23) திங்கட்கிழமை அமுல் படுத்தப்பட்டுள்ள நிலையில் பெண்களை தலைமைத்துவமாக கொண்ட மற்றும் கூலித்தொழில் செய்பவர்களின் குடும்பங்கள் பாதீக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் பாதீக்கப்பட்ட மக்களின் நலனை கருத்தில் கொண்டு மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் எஸ்.கேதீஸ்வரனின் முயற்சியினால் பாதீக்கப்பட்ட ஒரு தொகுதி குடும்பத்தினர் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு இன்று திங்கட்கிழமை காலை (23) உலர் உணவு பொதி வழங்கி வைக்கப்பட்டது.

பிரதேசச் செயலாளருடன் இணைந்து கிராம அலுவலகர் மற்றும் பிரதேச செயலக பணியாளர்களும் இணைந்து வழங்கி வைத்தனர்.பிரதேசச் செயலாளரின் முன் மாதிரியான செயல்பாடு தொடர்பாக அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.




உலர் உணவு பொதிகளை வழங்கி முன் மாதிரியாக செயல்பட்ட மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் எஸ்.கேதீஸ்வரன். Reviewed by Author on March 24, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.