அண்மைய செய்திகள்

recent
-

ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவதற்கான புதிய காலக்கெடுவை நிர்ணயித்தது ஐஓசி -


உலகளவில் கொரோனா வைரஸ் தொற்று மிகக்பெரிய அளவில் அச்சுறுத்தி வரும் காலக்கட்டத்தில் இந்த வருடம் நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டி அடுத்த வருடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜப்பானின் டோக்கியோவில் இந்த வருடம் ஜூலை 24-ம் திகதியில் இருந்து ஆகஸ்ட் 9-ம் திகதி வரை ஒலிம்பிக் போட்டி நடைபெற இருந்தது. அதற்கான தகுதிச்சுற்றுகளும் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், கொரோனா பல உலக நாடுகளை அச்சுறுத்தி வருவதால் ஒலிம்பிக் போட்டி அடுத்த வருடம் ஜூலை 23-ம் திகதியில் இருந்து ஆகஸ்ட் 8-ம் திகதி வரை நடைபெறும் வகையில் மாற்றப்பட்டு அதற்கு ஏற்ப புதிய காலக்கெடுவை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அறிவித்துள்ளது.
இதன் அடிப்படையில் அடுத்த ஆண்டு ஜூன் 29-ம் திகதி வரை தகுச்சுற்றுகள் நடத்தி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பட்டியலை அனுப்ப வேண்டும் என அறிவித்துள்ளது.

மேலும் இந்த காலக்கட்டத்திற்குப் பிறகு தகுதி பெற முடியாது என்று தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவதற்கான புதிய காலக்கெடுவை நிர்ணயித்தது ஐஓசி - Reviewed by Author on April 04, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.