நானாட்டான் பிரதேசச் செயலகத்தில் இடம் பெற்ற இரத்த தான முகாம்-நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கி வைப்பு....
நானாட்டான் பிரதேசச் செயலகம் மற்றும் நானாட்டான் பொது
சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையும் இணைந்து ஏற்பாடு செய்த இரத்ததான முகாம்
இன்று வெள்ளிக்கிழமை (29) காலை 10 மணியளவில் நானாட்டான் பிரதேசச்
செயலகத்தில் இடம் பெற்றது.
நானாட்டான்
பிரதேசச் செயலாளர் மாணிக்கவாசகர் சிறீஸ் கந்தகுமார் தலைமையில் இடம் பெற்ற
குறித்த இரத்ததான முகாமில் நானாட்டான் பொது சுகாதார வைத்திய அதிகாரி
வைத்தியர் வி.ஆர்.சி.லெம்பேட் கலந்து கொண்டார்.
இதன் போது பொது சுகாதார பரிசோதகர்கள்,கிராம அலுவலகர்கள்,என பலர் கலந்து கொண்டனர்.
குறித்த இரத்ததான முகாமில் இளைஞர்கள்,யுவதிகள் என நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு இரத்ததானம் செய்தனர்.
நானாட்டான் பிரதேசச் செயலகத்தில் இடம் பெற்ற இரத்த தான முகாம்-நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கி வைப்பு....
Reviewed by Author
on
May 29, 2020
Rating:

No comments:
Post a Comment