பேசாலை கடற்கரையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த தொலைத்தொடர்பு சாதனங்கள் மீட்பு
மன்னார் – பேசாலை, நடுக்குடா கடற்கரையில் தொலைத்தொடர்பு சாதனங்கள் சில இன்று மீட்கப்பட்டன.
பேசாலை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, மன்னார் நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவினைப் பெற்று இன்று மீட்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
பேசாலை பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் இணைந்து மீட்பு நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.
நடுக்குடா கடற்கரையில் நிலத்திற்கடியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மூன்று தொலைத்தொடர்பு சாதனங்களும் இதர உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளன.
பேசாலை கடற்கரையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த தொலைத்தொடர்பு சாதனங்கள் மீட்பு
Reviewed by Author
on
June 11, 2020
Rating:

No comments:
Post a Comment