அண்மைய செய்திகள்

recent
-

கிண்ணியாவில் இடம்பெற்ற வெடிமருந்து வெடிப்பில் ஒருவர் பலி.........

திருகோணமலை – கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியாற்றுமுனை கரையோரப் பகுதியில் நேற்று (09) மதியம் வெடிபொருளொன்று வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் கிண்ணியா பெரியாற்றுமுனையைச் சேர்ந்த 39 வயதுடைய ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் படுகாயமடைந்த மற்றுமொருவர் கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இரும்பு வெட்டும் சிறிய ரக வாளால் அறுத்த சந்தர்ப்பத்தில் குறித்த வெடிபொருள் வெடித்துள்ளதாக ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கிண்ணியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


கிண்ணியாவில் இடம்பெற்ற வெடிமருந்து வெடிப்பில் ஒருவர் பலி......... Reviewed by Author on June 10, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.