கிளிநொச்சி வாகனவிபத்தில் ஒருவர் பலி...
வீதியில் தரித்து நின்ற பார ஊர்தியுடன் யாழ் நோக்கி பயணித்த வான் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த பார ஊர்தியானது தரித்து நிற்பதற்கான எந்தவொரு சமிக்ஞையும் இல்லாத நிலையில் யாழ் நோக்கிய திசையில் நிறுத்தப்பட்டுள்ளது. அதே திசையில் பயணித்த வான் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பார ஊர்தியுடன் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியை சேர்ந்த 43 வயதுடைய சுவேந்திரன் என்பவரே உயிரிழந்தவராவார். உயிரிழந்தவரின் சடலம் முழங்காவில் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை ஜெயபுரம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றன்மை குறிப்பிடத்தக்கது..
கிளிநொச்சி வாகனவிபத்தில் ஒருவர் பலி...
Reviewed by Author
on
July 24, 2020
Rating:

No comments:
Post a Comment