முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் எந்த ஒரு அச்சுறுத்தலும் இல்லாது வாழ்ந்தார்கள்....
பளை பிரதேசத்தில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்..
மேலும் அவர் தெரிவிக்கையில்.....
முன்னாள் போராளிகள் மீண்டும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது. 2009 யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் இருந்த நிலைமையை போன்று தற்போதும் முன்னாள் போராளிகள் அச்சுறுத்தப்படும் நிலை இங்கே உருவாகியுள்ளது. வீடுகளுக்கு செல்லும் புலனாய்வாளர்களால் முன்னாள் போராளிகள் அச்சுறுத்தப்படுகிறார்கள். அத்தோடு அவர்களின் விபரங்கள் சேகரிக்கப்படுகின்றது.
எனினும் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் எந்த ஒரு அச்சுறுத்தலும் இல்லாது முன்னாள் போராளிகளுக்கான வேலைவாய்ப்புகள் மற்றும் பல்வேறுபட்ட செயல் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுநிலையில் தற்போதைய காலப்பகுதியில் முன்னாள் போராளிகள் கடும் அச்சுறுத்தல் உள்ள நிலையை காணக்கூடியதாகவுள்ளது என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது...
முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் எந்த ஒரு அச்சுறுத்தலும் இல்லாது வாழ்ந்தார்கள்....
Reviewed by Author
on
July 21, 2020
Rating:

No comments:
Post a Comment