அண்மைய செய்திகள்

recent
-

திருகோணமலையில் யானை தாக்கி ஒருவர் பலி....

திருகோணமலை, அல்லை கந்தளாய் பிரதான வீதியை அண்டிய பகுதியில் காட்டு யானை தாக்கி இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரிழந்துள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவிருக்கின்றனர்.

இச்சம்பவம் சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று (23) அதிகாலை 4.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவத்தில் மகியங்கனை பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய மற்றும் தொழில் ரீதியாக சேருவில பகுதியில் தங்கி நின்று மணல் அகழ்வு வேலைகளை மேற்கொண்டு வந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சடலம் தற்போது கந்தளாய் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் மேற்கொள்ளதாக தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது...



திருகோணமலையில் யானை தாக்கி ஒருவர் பலி.... Reviewed by Author on July 23, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.