மலேசியாவில் இருந்து வந்த இருவருக்கு கொரோனா
அதன்படி, இந்நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 2953 ஆக அதிகரித்துள்ளது.
மலேசியாவில் இருந்து வந்த இருவருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இன்றைய தினம் மேலும் 7 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ள நிலையில் இதுவரை 2805 பேர் பூரணமாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதேபோல், நேற்றைய தினம் ஐடிஎச் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த கொரோனா நோயாளர் ஒருவர் உயிரிழந்தார்.
அதன்படி, இந்நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.

மலேசியாவில் இருந்து வந்த இருவருக்கு கொரோனா
Reviewed by Admin
on
August 23, 2020
Rating:

No comments:
Post a Comment