விஷேட அதிரடிப் படையினரால் ஹெரோயின் மற்றும் பணத்துடன் ஒருவர் கைது!
வாழைச்சேனை கடதாசி ஆலை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து வாழைச்சேனை விஷேட அதிரடிப் படையினரின் உதவியுடன் மேற்கொண்ட சுற்றிவலைப்பின் போது மீராவோடை பாடசாலை முன்பாக ஹெரோயின் போதைப் பொருளுடன் 48 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் மாவடிச்சேனை பகுதியில் வசிக்கும் நாற்பத்தி 8 வயதுடையவர் என்றும் அவரிடம் இருந்து 170 மில்லி கிராம் மற்றும் 220 மில்லி கிராம் என 390 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளும், அதனோடு சிறுதொகை பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
வாழைச்சேனை விஷேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் ஹெரோயின் போதைப் பொருள், பணம் என்பன வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்துள்ளார்.
விஷேட அதிரடிப் படையினரால் ஹெரோயின் மற்றும் பணத்துடன் ஒருவர் கைது!
Reviewed by Author
on
September 23, 2020
Rating:

No comments:
Post a Comment