யாழ் ஐந்து சந்தியில் 100 கிலோ மாட்டு இறைச்சி கைப்பற்றல்!
இன்று (22) காலை 10 மணியளவில் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலினடிப்படையில், குறித்த மாட்டிறைச்சி கைப்பற்றப்பட்டுள்ளது.
சம்பவத்தின்போது, முச்சக்கர வண்டியில் 100 கிலோ மாட்டிறைச்சியை கொண்டு செல்ல முற்பட்டவேளை, விஷேட அதிரடிப் படையினரால் குறித்த மாட்டிறைச்சி கைப்பற்றப்பட்டுள்ளதுடன், இறைச்சியாக்குவதற்குத் தயார் நிலையில் இருந்த 33 ஆடுகளும் விசேட அதிரடிப் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ் ஐந்து சந்தியில் 100 கிலோ மாட்டு இறைச்சி கைப்பற்றல்!
Reviewed by Author
on
September 22, 2020
Rating:

No comments:
Post a Comment