அண்மைய செய்திகள்

recent
-

சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்

ஐ.பி.எல் ரி-20 தொடரின் 4வது போட்டி நேற்று (22) நிறைவுக்கு வந்தது. சென்னையுடனான விறுவிறுப்பான இந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணி 16 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.

 இப்போட்டியில முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி ஸ்மித்தின் நிதான ஆட்டம் மற்றும் சாம்சனின் அதிரடியாலும் 20 ஓவர்களில் ஏழு விக்கெட்டுகளை இழந்து அபாரமாக 216 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

 அணிசார்பாக, சஞ்சு சாம்சன் 32 பந்தில் 9 சிக்ஸ்சர்கள், ஒரு பவுண்டரியுடன் ஓட்டங்களையும், ஸ்டீவ் ஸ்மித் 47 பந்தில் 4 சிக்ஸ்சர்கள், 4 பவுண்டரிகளுடன் 69 ஓட்டங்களையும், ஜே.சி அர்சர் 8 பந்தில் 27 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

 சென்னையின் பந்துவீச்சில், அதிகபட்சம் சாம் குர்ரன் 4 விக்கெட்களை கைப்பற்றினார். இந்நிலையில், சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 217 என்ற வெற்றியிலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய நிலையில் 6 விக்கெட்களை இழந்து 20 ஓவர்களில் 200 ஓட்டங்களைப் பெற்றுத் தோல்வியடைந்தது.

 அணிசார்பில் துடுப்பாட்டத்தில் பப்டூ ப்ளஸிஸ் 37 பந்தில் 7 சிக்ஸ்சர்கள், ஒரு பவண்டரியுடன் 72 ஓட்டங்களையும் சேன் வட்சன் 33 ஓட்டங்களையும், எம்.எஸ். டோனி 29 ஓட்டங்களையும் பெற்றனர். ராஜஸ்தானின் பந்துவீச்சில் ராகுல் தெய்வதியா 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான் Reviewed by Author on September 23, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.