போதைப் பொருட்களுடன் 10 பேர் கைது
இதன்போது ஹெரோயின், கேரள கஞ்சா மற்றும் போதைப் பொருளுடன் ஒரு பெண் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் குச்சவேலி பொலிஸாருடன் இணைந்து குச்சவேலி பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது, சுமார் 2 கிராம் மற்றும் 100 மில்லி கிராம் ஹெரோயினுடன் ஒரு பெண் கைது செய்யப்பட்டார்.
மன்னார் வீதியில் சென்ற சந்தேகத்திற்கிடமான முச்சக்கர வண்டி ஒன்றை புத்தளம் பகுதியில் சோதனை செய்த வட மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் மற்றும் புத்தளம் பிரதேச நச்சு போதை மருந்து தடுப்பு பிரிவின் அதிகாரிகள் அங்கிருந்து 1 கிராம் மற்றும் 500 மில்லி கிராம் ஹெரோயினை கண்டுபிடித்தனர்.
பின்னர் குறித்த ஹெரோயின் போதை பொருளுடன் முச்சக்கர வண்டியில் சென்ற 5 நபர்களை கைது செய்ததுடன் குறித்த முச்சக்கர வண்டியைுயம் கைப்பற்றினர்.
மேலும், புத்தளம் பொலிஸாருடன் இணைந்து நாகவில்லுவ பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, 45 கிராம் கேரள கஞ்சா வைத்திருந்த 2 சந்தேக நபர்களை வடமேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் கைது செய்தனர்.
மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் நீர்கொழும்பு எஸ்.பி. அலுவலக அதிகாரிகளுடன் இணைந்து நடத்திய மற்றொரு தேடுதல் நடவடிக்கையின் போது , 2 கிராம் கேரள கஞ்சா மற்றும் மருத்துவ பரிந்துரை இல்லாமல் சுமார் 1,000 ப்ரீகாபலின் காப்ஸ்யூல்கள் மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற ஒரு சந்தேகநபர் குறித்த மோட்டார் சைக்கிளுடன் கைது செய்யப்பட்டார்.
இதற்கிடையில் நுரைச்சோலை பனியடிய பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 12 கிலோ கிராம் மாவாவுடன் மற்றொரு சந்தேக நபரை வடமேற்கு கடற்படை கட்டளை கைது செய்தது.
இவ்வாரு கைது செய்யப்பட்ட பெண் உட்பட சந்தேக நபர்கள் 21 முதல் 41 வயதுக்குட்பட்ட பொடுவக்கட்டு, புத்தளம், தங்கொடுவ மற்றும் நுரைச்சோலை ஆகிய இடங்களில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்கள் போதைப் பொருள், முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிளுடன் குச்சவேலி, புத்தளம், கொச்சிகடை, மற்றும் நுரைச்சோலை பொலிஸ் நிலையங்களுக்கு மற்றும் புத்தளம் பிரதேச நச்சு போதை மருந்து தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
போதைப் பொருட்களுடன் 10 பேர் கைது
Reviewed by Author
on
September 26, 2020
Rating:

No comments:
Post a Comment