அண்மைய செய்திகள்

recent
-

ஜெய்ப்பூரில் எஸ்.பி.பி.யின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்திய திரையுலக பிரபலங்கள்

ஜெய்ப்பூரில் படப்பிடிப்பில் இருக்கும் நடிகர் விஜய் சேதுபதி, நடிகைகளான ராதிகா, டாப்ஸி ஆகியோர் எஸ்.பி.பி.யின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினர். அறிமுக இயக்குநர் தீபக் சுந்தர்ராஜன் இயக்கத்தில் நடிகை டாப்ஸி, ஒரு முழு நகைச்சுவை படத்தில் நடிக்க உள்ளார்.

 குறித்த படத்தில் விஜய் சேதுபதிக்கும் முக்கிய கதாபாத்திரம் வழங்கப்பட்டுள்ளது. அவர்களுடன் ராதிகா, யோகி பாபு போன்றோர் நடிக்கிறார்கள். ஜெய்ப்பூரில் ஆரம்பமாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பில் விஜய் சேதுபதி, ராதிகா உள்ளிட்ட நடிகர்கள் கலந்துகொண்டுள்ளார்கள்.

 இந்நிலையில் மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உருவப்படத்திற்கு விஜய் சேதுபதி, ராதிகா, டாப்ஸி ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது

ஜெய்ப்பூரில் எஸ்.பி.பி.யின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்திய திரையுலக பிரபலங்கள் Reviewed by Author on September 26, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.