அண்மைய செய்திகள்

recent
-

இரகசிய தகவலையடுத்து யாழ்ப்பாணம் திருநகரில் பெண் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் - திருநகர், ராஜசிங்கம் வீதியில் கஞ்சா போதைப்பொருளோடு 30 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 குறித்த பகுதியில் 7 கிராம் 520 மில்லிகிராம் எடையுடைய பொதி செய்யப்பட்ட நிலையில் பத்து சிறிய கஞ்சா பொதிகள் யாழ் மதுவரித் திணைக்கள உத்தியோகத்தர்களால் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன்போதே குறித்த பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளார் இன்று 2 மணியளவில் மதுவரி திணைக்கள அதிகாரிகளிற்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த பெண் கஞ்சாவினை மறைத்து உடைமையில் வைத்திருந்த வேளையில் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

 கைது செய்யப்பட்ட பெண்ணை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். அண்மைய நாட்களில் யாழ்ப்பாண குடாநாட்டில் பல்வேறு இடங்களில் ஹெரோயின் மற்றும் கஞ்சா போதைப் பொருட்கள் முப்படையினர் மற்றும் மது வரித்திணைக்களத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது 

இரகசிய தகவலையடுத்து யாழ்ப்பாணம் திருநகரில் பெண் ஒருவர் கைது Reviewed by Author on September 22, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.