தமிழர் தாயகத்தில் விடுக்கப்பட்ட அழைப்பு; முற்றாக முடங்கிய கிளிநொச்சி!
கிளிநொச்சி நகர வர்த்தக நிலையங்கள், சந்தைகள் பூட்டப்பட்டுள்ளன. இருப்பினும் மக்களின் அத்தியாவசிய தேவை கருதி மரக்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மாற்று இடங்களில் வைத்து விற்பனை செய்யப்படுகின்றன.
இருப்பினும் தனியார் போக்குவரத்து சேவைகள் இடம்பெறவில்லை என்பதுடன் அரச திணைக்களங்கள் வழமைபோல் திறந்துள்ளபோதிலும் அதன் செயற்பாடுகள் வழமைபோன்று இடம்பெறவில்லை.
பாடசாலைகளிற்கும் குறைந்தளவு மாணவர்களே சென்றிருப்பதாகவும், கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் இடம்பெறவில்லை எனவும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் மக்கள் நடமாட்டம் குறைந்துள்ளமையால் வழமையான செயற்பாடுகள் இடம்பெறவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
தமிழர் தாயகத்தில் விடுக்கப்பட்ட அழைப்பு; முற்றாக முடங்கிய கிளிநொச்சி!
Reviewed by Author
on
September 28, 2020
Rating:

No comments:
Post a Comment