ஆட்டோக்கு தீ வைத்த இருவர் காருடன் மாட்டினர்!
வவுனியா – பண்டாரிக்குளம் பகுதியில் நேற்று (31) அதிகாலை வீடு ஒன்றிக்குள் புகுந்து அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டிக்கு தீ வைத்தமை தொடர்பில் காருடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தீ வைப்பு சம்பவம் தொடர்பில் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாரிடம் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக விசாரணையை முன்னெடுத்த பொலிஸார் கார் ஒன்றுடன் முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த இருவரை கைது செய்தனர்.
குடும்ப பிரச்சினை காரணமாக இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
ஆட்டோக்கு தீ வைத்த இருவர் காருடன் மாட்டினர்!
Reviewed by Author
on
September 01, 2020
Rating:

No comments:
Post a Comment