அண்மைய செய்திகள்

recent
-

கிழக்கில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்காக 12 இடங்கள் அடையாளம்!

கொரோனா வைரஸ் தொற்று சந்தேகநபர்களை தனிமைப்படுத்தும் வகையில் கிழக்கு மாகாணத்தில் 12 இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற விசேட கூட்டத்தினைத் தொடர்ந்து நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். மேலும், கொரோனாத் தொற்று அதிகரிக்கும்போது அடுத்தக்கட்டமாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விசேட கூட்டத்தில் ஆராயப்பட்டதாக அவர் கூறியுள்ளார். 

  இதேவேளை, தேசிய கொரோனா செயலணியுடன் இணைந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் அடுத்தக்கட்ட செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் க.கருணாகரன் குறித்த ஊடக சந்திப்பில் தெரிவித்தார். இதனிடையே, கொரோனா தொற்று பாதிப்புள்ள பகுதிகளில் சில நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கும் தீர்மானத்தினை தேசிய கொரோனா செயலணியே மேற்கொள்ளும் எனவும் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அழகையா லதாகரன் தெரிவித்துள்ளார். இதேவேளை, இன்றைய கூட்டத்திற்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் நீண்ட நேரம் வெளியில் ஊடகவியலாளர்கள் காத்திருக்க வேண்டியிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்

.
கிழக்கில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்காக 12 இடங்கள் அடையாளம்! Reviewed by Author on October 24, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.