கிழக்கில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்காக 12 இடங்கள் அடையாளம்!
இதேவேளை, தேசிய கொரோனா செயலணியுடன் இணைந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் அடுத்தக்கட்ட செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் க.கருணாகரன் குறித்த ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.
இதனிடையே, கொரோனா தொற்று பாதிப்புள்ள பகுதிகளில் சில நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கும் தீர்மானத்தினை தேசிய கொரோனா செயலணியே மேற்கொள்ளும் எனவும் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அழகையா லதாகரன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இன்றைய கூட்டத்திற்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் நீண்ட நேரம் வெளியில் ஊடகவியலாளர்கள் காத்திருக்க வேண்டியிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்
.
.
கிழக்கில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்காக 12 இடங்கள் அடையாளம்!
Reviewed by Author
on
October 24, 2020
Rating:

No comments:
Post a Comment