அண்மைய செய்திகள்

recent
-

விதையனைத்தும் விருட்சம் அமைப்பினரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இரத்ததான முகாம்.

விதையனைத்தும் விருட்சம் அமைப்பினரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற 9வது விசேட இரத்ததானமுகாம் 53 பேருடன் நிறைவடைந்தது. விதையனைத்தும் விருட்சம் அமைப்பினரின் 9வது விசேட இரத்ததானமுகாம் இன்று யாழ்ப்பாணம் இரத்த வங்கியில் நடாத்தப்பட்டது குறித்தஇரத்ததான முகாமில்53 குருதிக் கொடையாளர்கள் குருதி கொடை வழங்கியிருந்தனர்.

 தற்போது யாழ்ப்பாண இரத்தவங்கியில் ஏற்பட்டுள்ள குருதித்தட்டுப்பாட்டு சூழ்நிலையை கருத்திற்கொண்டு விதையனைத்தும் விருட்சம் அமைப்பினரால் யாழ் மாவட்டத்தில் பல இடங்களில் இரத்ததான முகாம்கள் நடாத்தப்பட்து.

 அந்த வகையில் நாவற்குழி கீரிமலை (கூவில்) கொக்குவில்_இந்துக்_கல்லூரி புத்தூர் கந்தரோடை ஆகிய இடங்களில் இரத்ததானமுகாம்கள் நடாத்தி வைக்கப்பட்டது. தற்கால கொரோணா தொற்று அச்ச சூழ்நிலையால் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி யாழ்ப்பாணம் இரத்த வங்கியில் நடாத்தப்பட்டது.



விதையனைத்தும் விருட்சம் அமைப்பினரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இரத்ததான முகாம். Reviewed by Author on October 18, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.