அண்மைய செய்திகள்

recent
-

வேகக் கட்டுப்பாட்டினை இழந்த உழவியந்திர விபத்தில் போக்குவரத்து பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிலாவத்தை முதன்மை வீதியில் நேற்று(15) வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் போக்குவரத்து கடமையிலிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

 குறித்த துன்பியல் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் : வீதிப் போக்குவரத்து கடமையின் போது வெளிச்சம் இன்றி வந்த உழவு இயந்திரமொன்றை நிறுத்துமாறு சைகை காண்பித்தபோது சாரதி உழவியந்திரத்தை நிறுத்த முற்பட்ட போது வேகக் கட்டுப்பாட்டினை இழந்து விபத்துக்குள்ளானதில் கம்பளை மாவட்டத்தினை சேர்ந்த முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 42 வயதுடைய கேமந்த என்ற வீதிப் போக்குவரத்து பொலீசார் அதிகாரியே குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளார். இச் சம்பவத்தின் உழவு இயந்திரத்தின் சாரதி முல்லைத்தீவு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் விபத்துக்குறித்த விசாரணைகளை முல்லைத்தீவு பொலீசார் முன்னடுத்து வருகின்றனர்.



.
வேகக் கட்டுப்பாட்டினை இழந்த உழவியந்திர விபத்தில் போக்குவரத்து பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு Reviewed by Author on October 16, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.