இன்று சர்வதேச சிறுவர் தினம்: 2ம் 5ம் திகதிகளில் பாடசாலைகளில் நடைபெறவிருக்கின்றது.
மகளிர் மற்றும் சிறுவர் அமைச்சினால் வெளியிடப்பட்ட மேற்படி தொனிப்பொருளில் இன்று 1ஆம் திகதி சர்வதேச சிறுவர் தினத்தை பாடசாலைகளிலும் பலவேலைத்திட்டங்களை முன்னெடுத்து கொண்டாடவேண்டும் என கல்வியமைச்சு சுற்றுநிருபமொன்றை வெளியிட்டுள்ளது.
1ஆம் திகதி விடுமுறை தினமாகவிருப்பதால் பாடசாலைகளில் எதிர்வரும் 2ஆம் 5ஆம் திகதிகளில் இந்நிகழ்வுகளை சுகாதார நடைமுறை விதிகளுக்கமைவாக நடாத்த வேண்டும் என கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில சீகே பெரேரோ அறிவித்துள்ளார்.
சிறுவர் தின தொனிப்பொருள் அடங்கிய பதாதைகளை காட்சிப்படுத்தல் கொரோனாப் பாதுகாப்பு தொடர்பிலும் தொனிப்பொருளுக்கமைவாக மாணவர் மத்தியில் அவர்களது ஆக்கத்திறன் மற்றும் அழகியல் திறன்களை மேம்படுத்துமுகமாக குறுநாடகம் வாத்திய இசை பாடல் போன்ற நிகழ்ச்சிகளை நடாத்தலாம்.
பாடசாலைகளில் அக்.2ஆம் திகதி காலை கூட்டத்தில் ' எங்கள் நாடு எங்கள் கைகளில்' என்ற தொனிப்பொருளில் நிகழ்ச்சிகளை நடாத்துதல் வேண்டும்.
இத்தொனிப்பொருளுக்கமைவாக ஆக்கங்களை பாடசாலை சுவர்களிலும் அறிவித்தல் பலகைகளிலும் காட்சிப்படுத்தப்பட வேண்டும். பாடசாலைச்சிறுவர்களை போதைப்பொருள் பாவனையிலிருந்து பாதுகாத்தல் தொடர்பில் பெற்றோருக்கு அறிவூட்டம் செய்தல் ஆரோக்கியமான உணவுகளை உள்ளெடுத்தல் தொடர்பிலும் விழிப்புணர்வூட்டப்படல் வேண்டும் எனவும் அவர் கேட்டுள்ளார்.
இன்று சர்வதேச சிறுவர் தினம்: 2ம் 5ம் திகதிகளில் பாடசாலைகளில் நடைபெறவிருக்கின்றது.
Reviewed by Author
on
October 01, 2020
Rating:

No comments:
Post a Comment