வவுனியாவில் பேருந்தின் மீது முறிந்து விழுந்த மரம்!
செட்டிகுளத்திலிருந்து இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் 2 மணியளவில் வவுனியாவிற்கு பயணத்தை மேற்கொள்வதற்கு தயாராக இருந்த இ.போ.ச பேருந்து, பேருந்து நிலையத்தில் தரித்து நின்றது.
இதன்போது எதிர்பாராமல் ஏற்பட்ட காற்றின் வேகத்தினால் அருகிலிருந்த பாரிய பாலை மரம் ஒன்று திடீரென்று பேருந்தின் மீது முறிந்து வீழ்ந்துள்ளது.
எனினும் பேருந்தில் இருந்தவர்களுக்கு எவ்விதமான பாதிப்புக்களும் ஏற்படவில்லை என்று இ.போ.ச ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் பேருந்தின் மீது முறிந்து விழுந்த மரம்!
Reviewed by Author
on
October 15, 2020
Rating:

No comments:
Post a Comment